ஹைகூ-கதம்பம்.
வரவிற்காய் ஏங்குகின்றார்
வந்தால் ஏசுகின்றார்
சோகத்தில் மழை.
வளர்ந்தால் நிழல்
மடிந்தால் விறகு
மரம்.
ஓடிக்கொண்டே இருக்கின்றான்
கழைப்பறிய மாட்டானோ?
கடிகாரம்.
ஆற்றுவிக்கப்பட்ட பின்னும்
பீனிக்ஸாய் வருவதேன்?
பசி.
நகரும் உயிர்ச்சக்கரம்
தகர்க்கும் ஒற்றன்
மரணம்.
சமுதாயச் சந்தையில்
அவனுக்கும் அவளுக்குமான பண்டமாற்று
திருமணம்.
இன்று வீழ்ந்தால்
நாளை எழுவான்
சூரியன்.
எழுவதற்காகவே
வீழ்கின்றதோ?!...
அலை.
கரையேரத்துடித்த அலையின்
ஆவேச முயற்சியோ?!...
சுனாமி.