நீ பெண்ணாய் இருப்பதால்...
நீ
உப்பாய் இருந்தால்
நான்
உவர்ப்பாய்.
நீ
பாக்காய் இருந்தால்
நான்
துவர்ப்பாய்.
நீ
வேம்பாய் இருந்தால்
நான்
கசப்பாய்.
நீ
மிளகாய் இருந்தால்
நான்
காரமாய்.
நீ
கனியாய் இருந்தால்
நான்
இனிப்பாய்.
நீ
தேனாய் இருந்தால்.
நான்
தித்திப்பாய்.
நீ...
பெண்ணாய் இருப்பதால்
நான்
காதலனாய்.
2 Comments:
Nee kavi arasanaai irukkum varaiyil, naan un rasigaiyaai.
With regards,
B. Mahalakshmi.
நன்றி மஹாலட்சுமி. அடிக்கடி வருகை தாருங்கள்
Post a Comment
<< Home