/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Wednesday, June 28, 2006

விதவை

நிலவு சூடாத
நீல வானம்.

மீன்கள் நீந்தாத
நீலக் கடல்.

பூக்கள் இல்லாத
ரோஜாச் செடி.

விண்மீன் இல்லாத
இரவு வானம்.

பல்லவி எழுதாத
இசைப் பாடல்.

பெண்ணே!
நினைத்துப் பார்க்க
நெஞ்சம் கனக்கிறது.

வானம் எப்போதும்
வெறுமையாய் இருப்பதில்லை.
நீ
நிலவாய் நெற்றிப் பொட்டிடு.

மீன்கள் நீந்தாது
நீலக்கடல் இருப்பதில்லை.
உன்னுள் துள்ளும் மீனாய்
உற்சாகத்தை வளர்த்துக்கொள்.

செடிகள்
பூக்காமல் இருப்பதில்லை.
நீயும்
பூவாய் சிரித்திரு.

விண்மீன் இல்லாது
இரவு வானம் ஜொலிப்பதில்லை.
பல்லவி இல்லாது
பாடலும் ரசிப்பதில்லை.

ஏன்
நீ மட்டும் தனிமரமாய்?!.

0 Comments:

Post a Comment

<< Home