/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Saturday, June 17, 2006

உற்ற நண்பன்

என்
வரவிற்காக வாசலில்
தினமும் காத்திருப்பான்.

வழிப்பயணத்தில்
பாதம் முத்தமிட்டு நடப்பான்.
கற்களும் முற்களும்
கழிவுகளும் தாங்கி சகித்திருப்பான்.

தான்
தேய்ந்த போதும்
நான் நோகாது
காத்து நிற்பான்.

தெய்வம்
தொழச்சென்றால்
நான் புண்ணியம் பெற
வாயிலில் தவம் இருப்பான்.

நான்
விழித்திருக்கும் வேளையெல்லாம்
எனக்காய் உழைதத
என் பாத அணியே!
நான் துயில்கையில்
உனை
யார் கவர்ந்து சென்றார்?

பாத அணி
தொலைந்து போனால்
நல்ல சகுணமாம்.
சேதி கேட்ட
அத்தை சொன்னார்.

சகுணம் பணம் பற்றி
நினைக்கத்தோன்ற வில்லை.
உன் இழப்பில்
மனதில் ஏதோ நெருடல்.

எங்கிருப்பினும்
உன் பணி
சிறப்புறச்செய் நண்பனே!
------------------------------------------------------------------------------------------------
மும்பையிலிருந்து 13.06.06 அன்று இரயிலில் ஊர் திரும்பும் போது யாரோ ஒரு முகம் தெரியாத அன்பர் என் பாத அணியை கவர்ந்து சென்றுவிட்டார். அதன் தாக்கத்தில் எழுதியது.
------------------------------------------------------------------------------------------------

2 Comments:

At 7/7/06 8:04 am, Blogger Unknown said...

Really very nice. chumma kalakkitteenga sir...

 
At 8/7/06 1:43 am, Blogger மா.கலை அரசன் said...

வருகைக்கு மிக்க நன்றி. அடிக்கடி நம்ம பக்கத்த எட்டிப்பார்த்து கருத்து சொல்லிட்டுப்போங்க மேடம்.

 

Post a Comment

<< Home