நான்... நீ
நான்....நீ
நான்
நீல வானம்.
நீ என்னில்
பகலில் சூரியன்
இரவில் குளிர் நிலா.
நான்
ஆழ்ந்த அலை கடல்.
நீ என்னில்
வெளிப்பரப்பில் காதல் அலை.
உள் மனதில்
நீந்தி குதூகலிக்கும் வண்ண மீன்.
நான்
அழகிய மரம்.
நீ என்னில்
கண்ணுக்குத்தெரியாத ஆணிவேர்
கண்டுகளிகக அழகிய பூ.
நான்
கம்பீரமான மலை.
நீ என்னில்
அழகிய பசுமரக்காடு
எழில் நீரோடை
நான்
வரண்ட பாலைவனம்.
நீ என்னில்
வெயிலில் கானல் நீர்
காற்றில் பாலைவனப் புயல்.
நான்....நீ
எப்போதும் இணைந்தே
நாம்.
0 Comments:
Post a Comment
<< Home