காற்று
பவுர்ணமி நிலவு கண்டு
நான்
சந்தோசித்து இருந்ததால்
மெல்ல இதமாய் தவழ்ந்து வந்தேன்.
மனிதன் என்னை
இனிய தென்றல் என்றான்.
அவன்
வார்த்தையில் குளிர்ந்த நான்
விடியலின் போது
இன்னும் குளிர்ச்சியாய் வீசினேன்
நடுங்கிப்போன மனிதன்
என்னை
ச்ச...வாடைக்காற்று
வாட்டுகின்றதே என்றான்.
மனிதனின்
சலிப்பைப்பார்த்து வருந்தி
பகலின் போது
அமைதியாய் இருந்தேன்
வெயிலின் வெம்மை தாங்காது
இப்போதும் மனிதன்
ச்ச... காற்றே இல்லை என்று
சலித்துக்கொண்டான்.
அவன்
சலிப்பைப் பார்த்து
வெயிலின் வெம்மை தணிக்க
சற்று பலமாய் வீசினேன்.
இப்போதும்
கேசம் கலைந்த மனிதன்
ச்சே... இழவு காற்று
பேய் போல் வீசுகின்றதே என்று
திட்டித்தீர்த்தான்.
வருந்திய பெண்
தாய் வீடு செல்வது போல்
கலங்கிய நான்
கடலைப்பார்த்துச் சென்றேன்
இயற்கையின் சுழற்சியால்
புயலாய் மாறி
மீண்டும்
மனிதனிடம் வந்தேன்.
அந்தோ!
என் சீற்றம் தாழாமல்
அவனோ வீடிழந்தும்
உற்றார் உறவினர் இழந்தும்
சிலர் எனை சுவாசிக்க மறந்தும்!
சீண்டாதே எனை.
மனிதா!
உனக்கு எல்லாம் நானே.
* * * * *
0 Comments:
Post a Comment
<< Home