ஒரு தலை காதல்
என்
பார்வை
உன் பார்வையை
தரிசித்த போது
பூக்களின் மகரந்தச்சேர்கையாய்
காதலை உணர்ந்தேன்.
நீ
என்னுடன் பேசிய
முதல் பேச்சின் பின் தான்
கருவுற்ற தாய் போல்
என்னுள்
நம்
காதல் கரு வைத்தேன்.
நாம்
பேசிக்கழித்த கணத்தில் தான்
என்னுள்
நம்
காதல் கருவும் வளர்ந்தது.
இறுதியில்
நாம் பேசிப்பழகியது
நட்பென்றாய்.
பெண்ணின்
பொய் கற்பம் போல்
என்
காதலும் ஒருதலையா?
------------------------------------------------------
14.08.2003-ல் இருக்கன்குடியில் வைத்து எழுதியது.
------------------------------------------------------
0 Comments:
Post a Comment
<< Home