/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Saturday, June 17, 2006

ஒரு தலை காதல்

என்
பார்வை
உன் பார்வையை
தரிசித்த போது
பூக்களின் மகரந்தச்சேர்கையாய்
காதலை உணர்ந்தேன்.

நீ
என்னுடன் பேசிய
முதல் பேச்சின் பின் தான்
கருவுற்ற தாய் போல்
என்னுள்
நம்
காதல் கரு வைத்தேன்.

நாம்
பேசிக்கழித்த கணத்தில் தான்
என்னுள்
நம்
காதல் கருவும் வளர்ந்தது.

இறுதியில்
நாம் பேசிப்பழகியது
நட்பென்றாய்.

பெண்ணின்
பொய் கற்பம் போல்
என்
காதலும் ஒருதலையா?

------------------------------------------------------
14.08.2003-ல் இருக்கன்குடியில் வைத்து எழுதியது.
------------------------------------------------------

0 Comments:

Post a Comment

<< Home