/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Friday, June 16, 2006

நான் நானாக இல்லை

என்னவளே!
உனக்கு தெரியுமா
நீ
தொட்டுத்தராத
பூவின் வாசம்
என் சுவாசத்திற்கு தெரிவதே இல்லை.

உன்
எச்சில் படாத நீர்
என் தாகம் தணிப்பதே இல்லை.

நீ
பிசைந்து தராத சாதம்
என் பசியைக் குறைப்பதே இல்லை.

நீ
வராத பயணத்தில்
நான்
சென்றடையும் தூரம் குறைவதே இல்லை.

நீ
அருகில் இல்லாத போது
நான்
நானாகவே இல்லை.
* * * * *

4 Comments:

At 17/6/06 10:13 am, Blogger doondu said...

அற்புதமான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துகள்.

 
At 18/6/06 12:46 am, Blogger மா.கலை அரசன் said...

வரவேற்பிற்கு இந்த இளையோனின் வணக்கங்கள்

 
At 8/7/06 3:08 pm, Blogger கார்த்திக் பிரபு said...

goodgood poem keep it up.

 
At 8/7/06 11:31 pm, Blogger மா.கலை அரசன் said...

வருகைக்கு நன்றி. உங்கள் மேலான கருத்துக்களை எப்போதும் எதிர்பார்க்கிறேன்.

 

Post a Comment

<< Home