உணர்வுகளால் பிரியாமல் இருக்க...
நீ
பார்த்த முதல் பார்வையில்
என்னில் தோன்றிய
மின்னல் பொறியை சேமிக்கின்றேன்.
உன்
முதல் பரிசத்தில்
மயிர்க்கால்கள் குத்திட்ட சிலிர்ப்பை
என்னில் சேமிக்கிறேன்.
நீ
என்னோடு பேசிய
முதல் வார்த்தையை
கவிதையாய்
என்னில் சேமிக்கிறேன்.
நீ
செல்லமாய் சண்டையிட
நான் மௌனியாய் இருந்த போது
உன்னில் ஏற்பட்ட
ஏக்கத்தை சேமிக்கிறேன்.
என்னவளே!
நீயே என்னோடு இருக்கும் போது
இது ஏன் என வினவுகின்றாய்?!
உனை பிரிய நேரும்
ஓரிரு நாளும்
உணர்வுகளால் பிரியாதிருக்கவே
உன் அசைவுகளை
நான் சேமிக்கிறேன்.
* * * * *
3 Comments:
கலையரசன்,
உங்கள் கவிதைகள காட்டுகின்றன நீங்கள் ஒரு கவியரசன் ஆகுவீர்கள் என்று.
வாங்க அரசே, நம்ம ஊர்ஸ்ஸே..வெளுத்து வாங்குங்க..
கவிதை என்று ஒரு வட்டத்துக்குள் நிற்காமல், எல்லாத்திலயும் ஒரு ரவுண்டு கட்டி அடிங்க!
உங்கள் ஊக்குவிப்பு கண்டிப்பாக உயரவைக்கும்.
Post a Comment
<< Home