/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Tuesday, June 20, 2006

தேன்கூடு-போட்டி: வளர் சிதை மாற்றம்.

அண்ட வெளியில்
நீண்ட நெடும்
கோடி ஆண்டுக்கு முன்
சூரியனின் சிதைவு
இன்று
பூ உலகாய்.

அக்கினிக் குழம்புத்துண்டின்
நீண்ட நெடும் குளிர்வு
இன்று
பூமியில்
காற்றாய், நீராய், மலையாய்.

நீரோடையில்
ஓடி இழைத்த கற்கள்
மண்துகளாய்.

உயிரின் தோற்றம்
ஒரு செல் அமீபா.
வளர் சிதை மாற்றத்தின்
மையில் கல்லாய்
மனிதன்.

கற்பாறையில் ஆரம்பித்த
சரித்திரம்
இன்று கணினியில்.

சங்ககால மங்கைக்கு
காதல் தூதர்
அன்னப் பறவை, மயில்.
தற்கால மங்கைக்கு
செல்பேசி, குறுச்செய்தி, மின்னஞ்சல்.

சென்ற தலைமுறை
சிறுவனின் வாகனம்
குறும்பல் வண்டி.
இன்றைய சிறுவனுக்கோ
பாட்டரி கார்கள்.

பயணத்தில் பாதை மாறலாம்
பயணிக்கும் வாகனமும் மாறலாம்
இலக்குகள் ஒன்றே.

பருகும் பானங்கள் மாறலாம்
பாத்திறமும் மாறலாம்
தாகம் ஒன்றே.

உண்ணும் உணவு வேறாகலாம்
உட்கொள்ளும் விதம் வேறாகலாம்
பசி ஒன்றே.

பாறை
கொத்தனின் பார்வையில் படியானது.
சிற்பியின் பார்வையில் தெய்வமானது.

உருவங்கள் மாறும்
உருவகங்கள் மாறும்
மாற்றம் மட்டுமே
எப்போதும் மாறாத தேற்றம்.

மாற்றம் என்பது வளர்ச்சி
அதுவே மானிடத்தின் உயர்ச்சி.

3 Comments:

At 22/6/06 12:21 pm, Blogger யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

 
At 22/6/06 9:39 pm, Blogger மா.கலை அரசன் said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி. கடைசி நேரத்தில் எழுதவேண்டும் போல் தோன்றியது மனதில் பட்டதை கிறுக்கிவிட்டேன்.

 
At 23/6/06 11:05 pm, Blogger மா.கலை அரசன் said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

 

Post a Comment

<< Home