விடியலின் குரல்
உண்ணப்பட்ட விதைகள் எல்லாம்
மாண்டு போவதில்லை.
எச்சங்களாய் வெளிப்பட்டும்
முளைவிடுவோம்.
எங்கள்
கிளைகள் வெட்டப்படுவதால்
நாங்கள் காய்ந்து போவதில்லை
பல கிளையாய் துளிர் விடுவோம்.
சருகுகளாய்
எங்கள் உணர்வுகளை
மண்ணில் புதைத்தாலும்
உரமாய்
மற்றோர் உயிர்க்கு
ஊக்கம் தருவோம்.
பாறைகளை உடைப்பது போல்
எங்களை சிதைத்தாலும்
நாங்கள் அழிவதில்லை
துகள்களாய் எங்கும் வியாபிப்போம்.
தணலிடை இட்டு
எங்களை பொசுக்கிடிலும்
சாம்பலாய் உயிர்த்தெழுவோம்.
மாலைப்பொழுதின் இருளாய்
துஷ்டர்கள்
எங்களை துயர்படுத்திடினும்
நாளைய விடியலில்
ஆதவனாய் எழுவோம்.
0 Comments:
Post a Comment
<< Home