எனை பிரியாதிரு
என் இனியவனே!
உனக்காக,
என்
பட்டண வாழ்கை துறந்து,
பட்டிக்காட்டு மருமகளானேன்.
உனக்காக,
என்
ஹைடெக் கனவுகளைத் துறந்து,
கட்டுப்பாடுகளை
மாலையாக சூடிக்கெண்டேன்.
உன்
அன்பில் திழைத்து
என் தேவைகள் மறந்தும் துறந்தும்,
உன் தேவைகளை
எனதாக்கிக்கொண்டேன்.
நான்
உன் அன்பில் கட்டுண்ட
கூட்டுப்புழு.
உன் காதல் வெளிச்சத்தை வட்டமிடும்
விட்டில் பூச்சி.
உன் நவ குணங்களில் - உன்
அன்பை மட்டுமே
பெரிதாய் எண்ணும் அன்னப்பறவை.
நான்
உன் நடைபயணத்தில்
செருப்பாய்.
உன் மகிழ்ச்சியில்
சிரிப்பாய்.
உன் சோகத்தில்
ஆறுதலாய்.
உன் கழைப்பில்
தாகம் தணிக்கும் தண்ணீராய்
இருக்கவே விரும்புகிறேன்.
நீ
தாயாய் அன்பைத் தந்தாய்,
சேயாய் பாசம் பெற்றாய்,
நண்பனாய் உன்னுணர்வு பகிர்ந்தாய்,
எங்கணம் என்னுணர்வு
அறியாமல் போனாய்?!!!
எனக்கு
உனை பிரிந்த கணம்-
ஒரு யுகம்.
உனை தழுவாத தென்றல்-
அணல் காற்று.
நீ
அருகில் இல்லாத போது
பால்நிலா - அது
எனை சுட்டெரிக்கும் சூரியன்.
மொத்தத்தில்
நீ
அருகில் இல்லாத நாள்-அது
நான்
வாழாத நாள்.
என்னவனே!
எனக்காக வாழும் நீ,
இனியாவது
எனை பிரியாமலும் இருக்க பழகு!!
இல்லையேல்...
உன் பிரிவு தாங்கும்
யுக்தியாவது கற்றுத்தா!!!
0 Comments:
Post a Comment
<< Home