/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Saturday, July 08, 2006

காதலை சுவாசிக்க...

நீ
நடந்தாய்.
நான்
நாட்டியத்தைக் கற்றுக்கொண்டேன்.

நீ
பேசினாய்.
நான்
பாடக் கற்றுக்கொண்டேன்.

நீ
அழுதாய்.
நான்
சோகத்தின் வலி உணர்ந்தேன்.

நீ
பசித்திருந்தாய்.
நான்
ஏழைகளின் துயர் உணர்ந்தேன்.

நீ
கண்ணசைத்தாய்.
நான்
கவிதையை கற்றுணர்ந்தேன்.

நீ
எப்போது
எனை நேசிப்பாய்.
நான்
காதலை சுவாசிக்க.
---------------------------------------------------------------------------------------------
13.08.2003 ல் விருது நகர் மாவட்டம் எம்.ரெட்டியபட்டி என்னும் ஊரில் வைத்து எழுதியது.
---------------------------------------------------------------------------------------------

5 Comments:

At 8/7/06 3:08 pm, Blogger கார்த்திக் பிரபு said...

good poem keep it up

 
At 8/7/06 4:07 pm, Blogger மா.கலை அரசன் said...

நன்றி கார்த்திக்

 
At 8/7/06 10:07 pm, Blogger கோவி.கண்ணன் said...

இதற்கு பின்னூட்டமிட வேண்டும் என்று தூண்டியது இந்த கவிதை.

பின்னூட்டம் இங்கு இருக்கிறது
:)))
http://govikannan.blogspot.com/2006/07/blog-post_09.html

 
At 9/9/06 12:33 am, Blogger சத்தியா said...

ஓ!... எல்லாம் அவள் செயலோ?

கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

 
At 9/9/06 10:30 pm, Blogger மா.கலை அரசன் said...

//ஓ!... எல்லாம் அவள் செயலோ?//
அதேத்தான் மேடம்.

 

Post a Comment

<< Home