கிரகணம் - (பாகம்-4)
பாகம் – 4.
ஏக்கங்களும்
எதிர்பார்ப்புக்களும் தான்
அடுத்த படிக்கு ஏறவைக்கின்றது
நம்மை...
பசித்ததால் தான்
உணவைத்தேடினோம்...
உணவில் ருசியை நாடினோம்...
பொட்டல் தரைகளை விளைநிலமாக்கினோம்...
நாளைய பசிக்கு இன்றே
சேமிப்பைத்தொடங்கினோம்...
கற்கால மனிதத்திலிருந்து
தற்கால நாகரீகம் வரை
பாதைகள் பல கடந்தோம்...
அனைத்தும்
ஏக்கங்கள் எதிர்பார்ப்புகளின் விளைவே...
மனிதத்திற்கு காதல் மீதும்
ஏக்கங்களும்
எதிர்பார்ப்பும் அதிகம்...
தமிழனின் காதலுக்கோ
இன்னும் அதிகம்...
காதல் வளர்வதிலும்
காதலர்கள் வாழ்வதிலும்
காதலுள்ளவன் தமிழன்...
காதல் வளர்க்க
கடவுளையே காதலிக்க வைத்தவன்...
காதலின் வளர்ச்சிக்கு இயற்கையை
தூதுவிட்டவன்...
இயற்கையையும் காதலிப்பவன்...
தமிழன் எனக்கும்
காதல் அரும்புதலில் வியப்பென்ன?...
கிரகணப்பொழுதில்
மனதைக் கவர்ந்து சென்ற
கன்னியவளை எங்கு காண்பேன்...
என் காதல் நெஞ்சை
எங்கனம் உரைப்பேன்?...
தயக்கம் காதலின்
முதல் எதிரி...
தயக்கத்தால் தளிர்விடாமல்
முளையிலேயே கருகிய காதல் பல...
குஞ்சு முட்டையின் தோடுடைத்து
வெளிப்பட்டால் தான்
விரிந்த வானில் வலம்வரலாம்…
தயக்கக்கூட்டை விட்டு
எண்ணங்கள் வெளிப்பட்டால் தான்
காதல் மொட்டவிழ்ந்து மலரும்
வாழ்க்கை காதல் பூந்தோட்டமாய் மாறும்...
ஏந்திழையவளை
எண்திசையும் காற்றாய்
ஏகி தேடினேன்...
மான்விழியவளின்
எழில் உருமட்டுமன்று...
மலரவளின் தேகம் தொட்ட
தென்றலின் தீண்டல் கூட போதும்
அவளின் பாதம் பட்டு
புண்ணியம் தேடும் இடம் கணிக்க...
நதிதீரத்தில்
மணலென திரண்ட மக்கள் கூட்டத்தில்
வைரம் ஒன்று மறைந்தலும் சாத்தியமோ?!...
வானில் இருள்கிழித்து
மதிதன் மலர்முகம் காட்டிற்று...
என் காதல் மதிமுகம் தான் காணேன்!...
கூடிய மக்கள் வெள்ளத்தில்
மீனாய் நீந்தினேன் அங்குமிங்கும்
ஏங்கே என்னவளின் தூண்டல் விழிகள்?!...
காண்பேனா அவளை?!...
காதல் சிறையில் சிக்குண்டு
அவளின்
கைதியாவேனா விரைவில்?!...
-o0o-
0 Comments:
Post a Comment
<< Home