அ, ஆ...கவிதை...7 (மனைவி)
அவள் பிறப்பு வேறிடம்
ஆசைகளும் விருப்பங்களும் வேறுவேறு
இனிய காதலில் மலர்ந்தாள்
ஈடில்லா இல்லரத்தில் கலந்தாள்
உள்ளத்தை என்னிடம் கொடுத்தாள்
ஊர்போற்ற நல்லபெயர் எடுத்தாள்
என்விருப்பம் தனதாக ஏற்றாள்
ஏற்றம்பெற வழிகள்பல உரைத்தாள்
ஐஸ்வரியமாய் என்னில் நிறைந்தாள்
ஒவ்வொருநாளும் காதலை வளர்த்தாள்
ஓய்வின்றி குடும்பத்திற்காக உழைத்தாள்
ஔவியம் பேசல் தவிர்த்தாள்
இஃதே இல்லாள் அறமென்றுரைத்தாள்.
ஃஃஃ
0 Comments:
Post a Comment
<< Home