/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, October 01, 2006

கவிதை! காதல்!! கடமை.!!!

கவிதை உள்ளம் கணலாகும்
காதல் உள்ளம் பனியாகும் – என்
கடமை உள்ளம் கல்லாகும்.

பெருளுக்கு சொல் தேடுமோ
பணிவு கொண்டு துதிபாடுமோ – கவி
பணியென்றே கொடுமைக்கு குழிதோண்டுமே.

வார்த்தைத்தேடி ஓடல் கவிக்கழகாமோ?
வேர்க்கும் உடலெல்லாம் உழைக்குமுடலாமோ – உள்ளத்தின்
வார்ப்புக்களே உண்மை கவியாகும்.

காதலும் வீரமும் கவிக்கருவாகும்
காதலோ கண்ணியத்தில் உருவாகும் – பெருகும்
காதலோ கவியால் தெளிவாகும்.

கண்டதனால் வந்திடுமோ காதல்
கண்மோகத்தால் வருவதுமா காதல் – நெஞ்சத்தின்
கண்வந்திடுமே உயிரன்பால் அதுகாதல்.

மோகத்தில் பித்தராய்ப்பிதற்றி பாட்டெழுதி
வேகத்தில் முடிந்துபோகும் அதுவோகாதல் – இத்
தேகமழிந்தாலும் அழியாது அதுகாதல்.

காதலித்தாள் கைவிட்டோட, உள்ளம்
பேதலித்து தூற்றுவதோ காதல் – தன்
வேதனை மறந்தவளை வாழ்த்துவதேகாதல்.

மேனி பளபளக்கும் உடல்வளம்
நாணாமல் பார்ப்பதுவோ காதல் – உடல்மேவாமல்
கனியுள்ளம் காண்பதுவே காதல்.

கண்ணடித்து பெண்ணொருத்தியை அழைத்து
கட்டிலுக்கு இழுப்பதுவோ காதல் – கண்ணொளியை
கவர்ந்திழுக்கும் பனியுள்ளம் காதல்.

காதற்களம் விளை நிலமாயின்
கடமையும் வீரமும் விளைச்சலாகும் – மனதிற்கு
காதலும் ஒரு கடமைதானோ?!...

மூர்க்கத்தில் கொடுமைசெய்யும் மூடரை
முறையென்று விடுவதோ கடமை – தவறாமல்
மூட்டெலும்பை உடைப்பதுவே கடமை.

தவறுசெய்தவன் தம்பியென்று நெறியின்றி
தப்பிக்க வழிசெய்வதோ காதல் – நேர்நின்று
தண்டிக்க வழிசெய்வதே கடமை.

பணப்பைக்கும் பஞ்சணைக்கும் உறவுகூறி
கனவானின் கால்பிடிப்பதோ கடமை – நிலை
குன்றிப்போனாலும் நெறியோடிருப்பதுவே கடமை.

உறவோர்க்கு கனியாக; அல்லாத
பிறவோர்க்கு கசப்பாக இருப்பதுவோகடமை – எல்லோர்க்கும் மாறாதக்கல்லாய் இருப்பதுவே கடமை.

தமிழ் நெஞ்சில் ஊறவேண்டும்
தமிழ்கவிதை காதல் கடமை – இனி
அகிலமெல்லாம் புகழவேண்டும் நம்மை.


ஃஃஃ
எழுதிய நாள் : 24.09.1989.
இவன் : மா. கலை அரசன்.
ஃஃஃ

4 Comments:

At 10/10/06 12:58 am, Blogger rahini said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

 
At 23/10/06 12:40 pm, Blogger சுஜா செல்லப்பன் said...

நல்ல சிந்தனை..பாராட்டுக்கள்...

 
At 27/10/06 9:59 pm, Blogger மா.கலை அரசன் said...

தங்களின் வரவிற்கும் கருத்திறஅகும் நன்றி ராகினி.

 
At 27/10/06 10:00 pm, Blogger மா.கலை அரசன் said...

தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுடர்விழி.

 

Post a Comment

<< Home