/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, September 10, 2006

நீ இல்லாத...ஒரு பொழுது...

நேரம் கடந்தது
காலை 08.30 மணியை
அலுவலகம் புறப்படவேண்டும்
இன்னும்
அரை மணியில்.

தேநீர்
தயாரிக்க
பால் காய்த்து முடிப்பதற்குள்
கையில் தீக்காயங்கள்
இரண்டு.

தேயிலைத்தூள்
தேடி எடுப்பதற்குள்
அடுக்களை அலமாரியில்
பாட்டில்களின்
அகரவரிசையோ ஆனது
அலங்கோலம்.

சர்க்கரையென்று
நினைத்து எடுத்தது
உப்பு.
தேநீரில் கலந்திருந்தால்
சுவை ஆகியிருக்கும் கைப்பு.

எல்லாம் முடிந்தபோது
நேரம் கடந்திருந்தது
காலை
09.30- மணியை.

என் தேநீரை
பருகிய வேளைதானுணர்ந்தேன்!...
நான்
குப்பையில் கொட்டென்று சொன்ன
உன் தேநீரின் சுவை
அமிர்தமென்று.

அப்பப்பா!
ஒரு பொழுது
நீ இல்லையென்றால்
இத்தனை சிரமங்களா?!...

0 Comments:

Post a Comment

<< Home