/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, August 20, 2006

அறிமுகம் செய்துகொள்!…

அறிமுகம்
செய்து கொள்வது நல்லது.
என்னை எனக்கும், உனக்கும்
உன்னை உனக்கும், எனக்கும்
நம்மை நமக்கும்
அறிமுகம்
செய்து கொள்வது நல்லது.

என்னை எனக்கும்
உன்னை உனக்கும்
அறிமுகம்
செய்து கொள்வது
நம்மை நமக்கே உணர்த்தும்
நம்பிக்கை பிறக்கும்-நாளும்
நம்மை வளர்க்கும்.

என்னை உனக்கும்
உன்னை எனக்கும்
அறிமுகம்
செய்து கொள்வது
நட்பை வளர்க்கும்-எந்நாளும்
மனிதம் சிறக்கும்.

அதிகாலை
சூரியனோடு
அறிமுகம் செய்து கொள்
நாள் முழுதும் புத்துணர்ச்சி பெருவாய்.

குளிர்நீரோடு
அறிமுகம் செய்து கொண்டு
மூழ்கியெழுந்து பார்
உடலெங்கும் உற்சாகம் கொள்ளும்.

மலரும்
பூ மொட்டுக்களோடு
அறிமுகம் செய்து கொள்
மனம் எல்லாம் மலர்வாய்.

முற்றத்து செடிக்கு
நீர் முகந்து
அறிமுகம் செய்து கொள்
பச்சை பசும் தளிராய்
முகம் மலர்ந்து சிரிக்கும்.

பசித்திருக்கும்
தெருவோர நாய்க்கு
ஒரு கவளம் சோரூட்டி
அறிமுகம் செய்து கொள்
உனை காணும் போது
வாலாட்டி நட்பை சொல்லும்.

தவறுதலாய்
வண்டியில் மோதவரும்
அன்பரையும் திட்டாமல்-ஒரு
புன்னகையை அறிமுகம் செய்
உன் உள்ளம் பூரிக்கும்.

அறிமுகமில்லா
அயலாரைத் தாண்டிச் செல்லும் போதும்
இதழோரம்
ஒரு புன்னகையை பூக்கவிடு.
உன் மனதும்
அவர் மனதும்-நாளெல்லாம்
பூப்போல வாசம் வீசும்.

இரவோடு
அறிமுகம் செய்து கொள்
பயம்விட்டுப் போகும்.

எங்கும்
எப்போதும்
முடிந்த மட்டும் எல்லோரிடமும்
அறிமுகம் செய்து கொள்
உலகுகமே
உன்னை அறிந்து கொள்ளும்.

8 Comments:

At 20/8/06 8:44 am, Blogger aaradhana said...

நல்ல கவிதை...

 
At 20/8/06 8:44 am, Blogger aaradhana said...

அது சரி காணியாரு என்றால் என்ன..

 
At 20/8/06 10:01 pm, Blogger மா.கலை அரசன் said...

காணியாறு=காணி+ஆறு
காணி-ங்குறது சிறு அளவைக்குறிக்கும்
ஆறு- உங்களுக்கே தெரியும், அதாங்க நிரோடை.
காணியாறு=காணி+ஆறு- சிறு நீரோடைங்க, ஆராதனா. ஊர்ல உள்ள எங்க மலையடிவாரத்து தோப்பு உள்ளார ஒரு சிறு நீரோடை போகுது. அதனால அந்த தோப்பை காணியாறு தோப்பு அப்படிண்ணு தான் ஊர்ல சொல்லுவாங்க. என் சிறு வயது நாட்கள் அதிகமாக கழிந்தது அங்கு தான்.

 
At 22/8/06 6:32 pm, Blogger ENNAR said...

காணிக்கு தண்ணீர் பாயும் ஆறு
நற்கவிதை தந்த நண்பருக்கு வாழ்த்துகள்

 
At 22/8/06 10:02 pm, Blogger மா.கலை அரசன் said...

கருத்துக்கு நன்றி ennar Sir.

 
At 9/9/06 12:23 am, Blogger சத்தியா said...

ம்... சும்மா சொல்லக் கூடாது. நல்ல கவிதை
எல்லாம் எழுதுறீங்க.

பாராட்டுக்கள் கலையரசன்.

 
At 9/9/06 12:24 am, Blogger சத்தியா said...

ம்... சும்மா சொல்லக் கூடாது. நல்ல கவிதை எல்லாம் எழுதிறீங்க.

பாராட்டுக்கள் கலையரசன்.

 
At 9/9/06 10:18 pm, Blogger மா.கலை அரசன் said...

உங்களின் பாராட்டுக்கும் விமர்சனத்திற்கும் மிக மிக நன்றி மேடம்.

 

Post a Comment

<< Home