மரம்.
நான்
இலைகள்
முதிர்ந்து உதிர்க்கும் போது
உரமாவேன்
கிளைகள்
காய்ந்து உலரும் போது
விறகாவேன்.
எனை நீ
மண்ணோடு மண்ணாக
சாய்க்கும் போதும்
உன் வீட்டில்
அழகு சேர்க்கும்
மரப்பொருளாவேன்.
மனிதா!
நீ எதற்காவாய்?!!
--------------------------------------------------------------------------------------------
இன்று மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது தங்க நாற்கர சாலை பணிக்காக வெட்டப்பட்டு வானம் பார்த்து கிடந்த காய்ந்த மரங்களை பார்த்த போது எழுதத்தூண்டியது.
0 Comments:
Post a Comment
<< Home