/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Sunday, July 09, 2006

ஹைகூ...ஐம்புலன்

உடலெங்கும் சிலிர்க்கிறது
பனியாய் – அவள்
பார்வை.

காதில் சிற்றோடையின்
இனிய சலசலப்பு – அவள்
பேச்சு.

மனதெல்லாம் பூவாசம்
காற்றில் கலந்து – அவள்
வாசம்.

தேகமெங்கும் பூவின் மலர்ச்சி
என் மீது – அவள்
தீண்டல்.

காதலுலகின் கதவு திறந்தது
அவள் தந்த
முதல் முத்தம்.

2 Comments:

At 11/7/06 10:28 am, Blogger நெல்லை சிவா said...

நன்றாக எழுதுகிறீர்கள், ஏன் தேன்கூடு போட்டியில் பங்கு பெறக்கூடாது? டிரை பண்ணுங்களேன்!

 
At 11/7/06 9:50 pm, Blogger மா.கலை அரசன் said...

உங்கள் வரவிற்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி. கதை ஒன்று எழுதிவைத்து விட்டேன். டைப் செய்யத்தான் நேரம் கிடைக்க வில்லை.

 

Post a Comment

<< Home