ஹைகூ...ஐம்புலன்
உடலெங்கும் சிலிர்க்கிறது
பனியாய் – அவள்
பார்வை.
காதில் சிற்றோடையின்
இனிய சலசலப்பு – அவள்
பேச்சு.
மனதெல்லாம் பூவாசம்
காற்றில் கலந்து – அவள்
வாசம்.
தேகமெங்கும் பூவின் மலர்ச்சி
என் மீது – அவள்
தீண்டல்.
காதலுலகின் கதவு திறந்தது
அவள் தந்த
முதல் முத்தம்.
2 Comments:
நன்றாக எழுதுகிறீர்கள், ஏன் தேன்கூடு போட்டியில் பங்கு பெறக்கூடாது? டிரை பண்ணுங்களேன்!
உங்கள் வரவிற்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி. கதை ஒன்று எழுதிவைத்து விட்டேன். டைப் செய்யத்தான் நேரம் கிடைக்க வில்லை.
Post a Comment
<< Home