உன் நினைவுகள்
ஐந்து வயதில்
நாயை கல்லெரிந்தபோது
தவறென்று சுட்டித் திருத்தி
பிற உயிர்மீதும் அன்புகொள்ளச்செய்து
உன் ஜீவகாருண்ய
முகம் காட்டினாய்.
அருவாள் கொண்டு
மரம் வெட்டியபோது
உடல் கிள்ளி
மரத்திற்கும் வலிக்குமென்றாய்.
மரங்களை நட்டு வளர்க்கச் செய்தாய்
பசுமைக்கு தோழனானாய்.
பாதையில் கிடந்த
முள் விலக்காது நடந்த போது
அதை நீயே விலக்கிவிட்டு
இனிவரும் காலம்
அதைச்செய்ய அறிவு தந்தாய்
எதிரிக்கும் நன்மை செய்யச்சொல்லி
மனிதம் வளர்த்தாய்.
இரட்டை வனவாசங்களை
அரேபியாவில் கழித்த போதும்
பாலைவனத்திலும் - என்றும்
உன் பெயர் சொல்ல
சோலைவனத்தை
உருவாக்கிவிட்டே வந்தாய்.
அப்பா!...
அறுபதாண்டுகளுக்கு முன்
காணியாறு விளையில்
நீ வைத்த மரங்கள்
சந்ததிகளுக்கும்
உன் பெயர் சொல்லும்...
நீ
பாறையில் செதுக்கிய
உன் பெயர் போலவே...
உன் நினைவுகளும் - என்று
ம்எங்களோடு நிலையாக.
1 Comments:
நினைவுகளை அழகாகச் சொல்லி இருக்கிறீங்கள். பாராட்டுக்கள்.
Post a Comment
<< Home