ஹைகூ - ஆறு
வானக் காதலனுக்காய்
மழைக்காதலி எழுதிய கவிதை
வானவில்.
ஃ
தன்னிறைவு பெற்றவர்கள்
மின் உற்பத்தியில்,
மின்மினிப் பூச்சிகள்.
ஃ
உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.
ஃ
பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.
ஃ
புகைந்து அழியும் போதும்
அஸ்திவாரமிட்டுச் செல்கிறது அழிவிற்கு,
சிகரெட்.
ஃ
உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி
2 Comments:
"உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி"...
நல்ல ஹைகூ கவிதைகள். எனக்கும் ஹைக்கூ கவிதைகள் நன்கு பிடிக்கும்.
பாராட்டுக்கள்.
சத்தியா மேடம் தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment
<< Home