ஹைகூ - இலட்சுமணக் கோடுகள் !...
தினம் உதைத்தாலும்
வருந்தாமல் சுமப்பான்
பைக்.
ஃ
குடித்தால் கேடு என்றார்
குடித்தால் தான் ஓடுகின்றான்
எந்திரவூர்தி.
ஃ
இலட்சுமணக் கோடுகள் அல்லவே
தாண்டாமல் இருப்பதற்கு?! – சாலை
நிறுத்தக்கோடுகள்.
ஃ
மோதவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றது
சிதைந்த உடல்களையும் வாகனங்களையும்
லெவல்கிராசிங்.
ஃஃஃ
0 Comments:
Post a Comment
<< Home