அ..ஆ..கவிதை - 1
அடடா அடடா அருமை
ஆண்டவன் படைத்தான் நம்மை
இயன்றவரை வளர்த்துவிடு திறமை
ஈசலாய் மாய்வது சிறுமை
உயர்வதற்கு வெல்லுங்கள் கயமை
ஊழ்வினை செய்வதா வறுமை
எதிரிக்கும் செய்யுங்கள் நன்மை
ஏற்றம்பெரும் உங்கள் நிலைமை
ஐயமின்றி போற்றிவிடு பெண்மை
ஒருநாளும் பொருத்திடாதே மடமை
ஓதுவாரை தொடர்வதில்லை அறியாமை
ஔவையாரோ தமிழுக்கு பெருமை
ஃ தமிழின் தனித்தன்மை.
ஃஃஃ
0 Comments:
Post a Comment
<< Home