/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Thursday, October 19, 2006

அ, ஆ...கவிதை - 8 (தீபாவளி)

அரக்கன் உயிர்பறிக்க - அந்நாளில்
ஆண்டவன் உதித்துவந்தான்
இறுதியில் வதைத்து அழித்திட்டான்
ஈடில்லா தீபாவளித்திருநாளை நமக்களித்திட்டான்
உலகினிலின்று ஆயிரம் கொடுமை
ஊர்தோறும் ஜாதியே தலைமை
என்றுதான் மாறும் இந்நிலைமை
ஏங்கித்தவித்தும் பதிலோ வெறுமை
ஐயத்தோடே கழிகிறதென் கிழமை
ஒழிவதென்றோ மக்களின் மடமை
ஓங்கியுரைப்பேனன்று தீபாவளி பெருமை
அஃதுவரை எதிர்த்துநிற்பேன் சிறுமை.
ஃஃஃ

0 Comments:

Post a Comment

<< Home