/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Thursday, October 19, 2006

அ..ஆ..கவிதை..2 (நட்பு)

அன்பான என் தோழீ
ஆண்டவன்தான் கொடுத்தான் வாழீ
இன்முகம் காட்டினாய் கவியில்
ஈடில்லை நட்பின் உறவில்
உள்ளத்தில் குன்றாய் நின்றாய்
ஊருக்கு சொல்வேன் நன்றாய்
எதுவரை நட்பின் பாலம்
ஏதுமில்லை வானத்தில் எல்லை
ஐயமோ சிலநேரம் தொல்லை
ஒற்றுமைதான் எந்நாளும் திண்மை
ஓயாமல் செய்வோம் நன்மை
ஔவையாய் உயர்வாய் கவியில்
ஃபோல் தெரிவாய் தனியாய்.
ஃஃஃ

0 Comments:

Post a Comment

<< Home