/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Monday, October 23, 2006

அ..ஆ..கவிதை..4(தமிழ்ப்பெண்.)

அழகான தேவதை அவள்
ஆண்டவனின் தனிப் படைப்பவள்
இன்சொல்லே அவள் முகவரி
ஈடில்லா அழகோ வெகுமதி
உலகே வியக்கும் மெல்லிடை
ஊமை விழிகளோ வில்
எவர்தான் விரும்பார் சொல்
ஏமாற்றம் தான் விரும்பியோற்கு
ஐரிஸ் நிறமோ கண்
ஒரு தலையாய் காதலித்தோர்
ஓடாமல் ஓடுகின்றார் காண்
ஔரவம் தான் அவள்சொல்
அஃதேகாண் அவள் தமிழ்ப்பெண்.
ஃஃஃ

2 Comments:

At 27/10/06 11:35 am, Blogger தாரிணி said...

அழகான தேர்ந்தெடுத்த வார்த்தைகள். வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி கண் முன் நின்று கொண்டிருக்கிறாள்.
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

 
At 27/10/06 9:55 pm, Blogger மா.கலை அரசன் said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தாரிணி.

 

Post a Comment

<< Home