/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Friday, November 03, 2006

அ, ஆ...கவிதை - 9 (மக்கட்பேறு)

அன்பாய் குழந்தைகள் இரண்டு வேண்டும்
ஆசைதீர கொஞ்சி மகிழ்ந்திடல் வேண்டும்
இன்பம் பெற்றே வாழ்ந்திடல் வேண்டும்
ஈடுஇணை வேரில்லையென்று தெளிந்திடல் வேண்டும்
உலகுக்கு நல்மனிதராய் கொடுத்திட வேண்டும்
ஊர்போற்ற நல்லவராய் வளர்த்திட வேண்டும்
எட்டுத்திக்கும் அறியச் செய்திட வேண்டும்
ஏமாற்றம் தவிர்க்க பழக்கிட வேண்டும்
ஐயமின்றி செய்வன செய்திடல் வேண்டும்
ஒற்றுமை பேண கற்பித்திட வேண்டும்
ஓய்வின்றி வாழ்வில் உழைத்திட வேண்டும்
ஔவியம் பேச மறுத்திடல் வேண்டும்
இஃது எந்நாளும் மறக்காதிருத்தல் வேண்டும்.
ஃஃஃ

2 Comments:

At 3/11/06 9:10 am, Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

ரொம்ப நல்லா இருந்துச்சுங்க! அகர வரிசையில் அமர்க்களப் படுத்தி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறு கை அளாவிய கூழ்.
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்!

 
At 3/11/06 9:45 pm, Blogger மா.கலை அரசன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கண்ணபிரான்.

 

Post a Comment

<< Home