/* --------------------Script for block Right Click-------------------*/ /*-----------End of Script right click---------*/

Monday, February 26, 2007

கிரகணம் - (பாகம்-5)

பாகம் – 5.

காதல் சுவாம் போன்றது...
காதல் இதயம் போன்றது...
காதல் காற்றைப்போல் வியாபித்திருப்பது...
காதல் அலைகளாய் ஆர்ப்பரிப்பது...
காதல் நட்சத்திரமாய் ஜொலிப்பது...
காதல் மழலையாய் கனிவது...

காதல் உற்ற உலகம் காலம் கடந்து வாழும்...
காதல் அற்ற உலகம் கரைந்தே இறந்து போகும்...

காதலில் எந்தக் காதல் சிறந்தது?!...
மனிதக் காதல் சிறந்ததென்றே சிலாகித்து
நாளும் பிதற்றித்திரிகின்றோம்!...

என்வரையில் சொல்வேன்
மனிதனும், மனிதன் வளர்க்கும்
பிராணிகளும் மட்டுமே
காதலில் தாழ்ச்சி என்பேன்...
மனிதனின் சகவாசமற்ற விலங்குகளே
காதலில் உயற்சி என்பேன்...

காதலி இருக்கும் போது
மற்றொருக் காதலியை தேடித்திரிவதும்...
மனைவி இருக்கும் போதே
கள்ளக் காதலை நாடுவதும்....
மனிதரில் மட்டுமே நடக்கின்ற ஒன்று...
மனிதன் பேணிவளர்க்கும் விலங்குகள் மட்டும்
மனிதனுக்கு இழைத்ததா என்ன?!...
ஆட்டுக்கும் மாட்டுக்கும் நாய்க்கும்
நிலையான ஜோடி எது?...

ஜோடி விட்டு ஜோடி தேடும் படலம்
எந்த காட்டுவிலங்கிடமும் கண்பதறிது...

வோளைக்கொரு துணை என்பது
காட்டு ராஜா சிங்கத்திடம் இல்லை...
நாட்டு ராஜாக்கள் மட்டும்
நாயாய் அலைவதேன்?!...


ஆசைகள் அதிகம் மனிதனுக்கு...
பெண்ணாகட்டும்...
பொண்ணாகட்டும்...
மண்ணாகட்டும்...
அனைத்திடமும் ஆசை அதிகம் மனிதனுக்கு...

அஃரிணை மீது ஆசை...
நியாப்படுத்திக் கொள்ளலாம்...

உயர்திணை பெண்ணிடம் ஆசை வேண்டாம்...
அவள் பொருளல்ல...
உயிர்...
மனிதா பெண்ணிடத்தில் அன்புகொள்...
காதல் கொள்...

நிமிடத்திற்கு நிமிடம்
நிறம்மாற்றும் பஞ்சோந்தித் தனம்
காதலில் வேண்டாம்...

காதல் இயற்கையானது...
காசு பார்த்து...
ஜாதி பார்த்து...
மதம் பார்த்து...
நிறம் பார்த்து...
அழகு பார்த்து...
காதல் வளர்த்து
காதலை கொச்சை செய்யாதே!...

காதலை இயற்கையின் வழியிலேயே காதல் செய்..
காதலும் புனிதமாகும்...
நீயும் புனிதனாவாய்...

கிரகணம் முடிந்துவிட்டது...
பால் நிலா இருள் கிழித்து
மருள்நீங்கி மக்கள் காணக்கிடைக்கின்றாள்
தன் பூரணதரிசனம் தந்து
பூத்துச் சிரிக்கின்றாள்...

காதலி!... நீ மட்டும்
என் கண்களுக்குள் சிக்காமல்
கண்ணாமூச்சி விளையாடுவதின் மர்மம் என்ன?!...

காதலி?!...
வினோதமாகத் தெரிகின்றதோ?...
காதலிக்காத ஒருத்தி
கண்டவுடன் எங்கனம் காதலியாவாள்?...
அவள் காதலிக்கின்றாளா இல்லையா
என்பதல்ல கேள்வி...
நான் காதலிக்கின்றேன்
அதனால் அவளென் காதலி என்பேன்...
ஒருவேளை அவளும் காதலித்தால்
நான் அவளின் காதலன் ஆவேன்...
நாங்கள் காதலர் ஆவோம்.

அவள் காதலிக்கவில்லை என்றாலும்
அவள் என் காதலிதான்...
என் காதல் பயணம் தொடரும்...
என் பயணத்தின் எல்லை அவள்தான்...

நாம் காதல் கொண்டவர்
காதலித்தால் மட்டும் காதலிப்பதல்ல காதல்...
அவர் காதலற்ற போதும் கூட காதலிப்பதுவே காதல்...

காதல் துன்பம் செய்யத்தெறியாதது...
காதல் கொடுமை செய்யாதது...
காதல் கருணை வடிவானது...
காதல் அன்பாய் மலர்வது...

எங்கே என் காதலி...
ஏங்கித் தவிக்கின்றேன்...
உயிரின் உருவாய் அவளை ஏற்றுக்கொண்டேன்
காதலின் கருவை என்னுள் வைத்துவிட்டேன்...
காலம் காலமாய்
ஆலம் விழுதென காதலை வளர்த்திடுவேன்
காதலி அவளை கண்டு விட்டால்.

கரைமுட்டும் மலைவெள்ளம் போல்
மக்கள் கூட்டத்தின் எல்லையெங்கும்
தொட்டுத் தேடுகின்றேன்...
காணக்கிடைப்பாள் என் காதலியென்றெண்ணி...

மனதின் எண்ணெங்கள் பொய்ப்பதில்லை...
நிலையான முயற்சியென்றும் தோற்பதில்லை...

அதோ...
மக்கள் வெள்ளத்தில்
நீந்த முயல்வதென் வெண்ணிலாவா?!…

ஃஃஃ வளரும்....

0 Comments:

Post a Comment

<< Home