உன்னால் மட்டும் எப்படி?
உடம்பு சரியில்லை
சமையலுக்கு
உதவ முடியுமா?
என்றாய்.
பார்க்கலாம் என்றுகூறி
ஒதுங்கிச் சென்றேன்.
காலெல்லாம் வலிக்கின்றது
குழந்தைகளை பள்ளியில்
விட்டுவிட்டுச் செல்ல முடியுமா?
என்றாய்.
அலுவலகத்தில்
வேலை என்றுகூறி
அலட்சியப்படுத்திச் சென்றேன்.
மாலையில்
மருத்துவமனை செல்ல வேண்டும்
விரைவில் வாருங்கள்;
என்றாய்.
நீயே சென்றுவா என்றேன்.
உன்
ஒவ்வொரு முயற்சியிலும்
உணர்வுகளை
காயப்படுத்தியும்
கலங்காதிருக்கின்றாய்.
மாலையில்
விடுதிரும்பியதும்
சூடாய் தேனீர் தந்தாய்.
சோர்ந்து நான்
சோபாவில் சாய்ந்த போது
தலையை
இதமாய் அழுத்திவிட்டு
தலைவலியா?
என்றாய்.
முகச்சோர்வில்
என் நோயறிந்தே
மருத்துவமனை செல்வோமா?
என்றாய்.
மறுத்தபோதும்
தலைவலி தைலம்
தடவிய பின்பே
நிம்மதி கொண்டாய்.
ம்ம்ம்...
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்?
மறக்கவும், மன்னிக்கவும்
சேவை செய்யவும்.
9 Comments:
vow! what a good kavithai Kalai arasan.. Keep it up.
உங்களின் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி.
"ம்ம்ம்...
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்?
மறக்கவும், மன்னிக்கவும்
சேவை செய்யவும். "...
ம்... ம்... அவள்தான் பெண். பெண் என்றால் பொறுமை நிறைந்தவள் அல்லவா?
பாராட்டுக்கள் கலை அரசன்.
//ம்... ம்... அவள்தான் பெண். பெண் என்றால் பொறுமை நிறைந்தவள் அல்லவா?//
உண்மைதான் பெண்கள் பொறுமை சாலிகள்தான், சீண்டாதவரை.
This comment has been removed by a blog administrator.
பெண்மையின் சிறப்பான வெளிப்பாடு!
'ம்ம்ம்...
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்?
மறக்கவும், மன்னிக்கவும்
சேவை செய்யவும்'
அழகான கவிதை. வாழ்த்துக்கள்.
//Moorthy said...
பெண்மையின் சிறப்பான வெளிப்பாடு! //
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி மூர்த்தி சார்.
//தாரிணி said...
'ம்ம்ம்...
எப்படி முடிகிறது
உன்னால் மட்டும்?
மறக்கவும், மன்னிக்கவும்
சேவை செய்யவும்'
அழகான கவிதை. வாழ்த்துக்கள். //
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி தாரிணி.
Post a Comment
<< Home