அ, ஆ...கவிதை - 11 (காதல்)
அன்பென்று சொல்வதா
ஆசையென்று கொள்வதா
இன்பம் தரவல்லதா
ஈடில்லாதது என்பதா
உயிரில் கலந்ததா
ஊக்கம் தருவதா
எல்லோருக்கும் வருவதா
ஏய்த்து அழிப்பதா
ஏங்கச் செய்வதா
ஐயம்கொள்ள வைப்பதா
ஒன்றாய் இணைப்பதா
ஓவியம் போன்றதா
ஔசித்தியம் பார்ப்பதா
இஃதே காதலுணர்வா.
ஃஃஃ